- அம்ரிதா ஏயெம்


ஒப்புக்கோடல் இலக்கியம் என்பது தனிமனித சுயசரிதைப் பாணியாக அல்லது புனைவாக அல்லது புனைவற்றதாகவும் இருக்கலாம். இங்கு மறைக்கப்பட்ட மிகவும் விரிவானதும் இரகசியமானதுமான உண்மைகள் வெளிக்குவிடப்பட வேண்டும். இருண்ட பக்கங்கள், சுரண்டல்கள், அடாத்துக்கள், வன்முறைகள், பேரவலங்கள் அதற்கான காரணங்கள், கர்த்தாக்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். சுய பச்சாதாபம், பாவமன்னிப்பு அல்லது பாவ ஒப்புக்கோடல் உணர்வுகள் தூக்கலாகவும் இருக்க வேண்டும். இவைகளுக்கெல்லாம் இரத்தமும் சதையுமான சாட்சியாகவுமிருந்த ஒருவரின் (அல்லது பலரின் உள்ளார்ந்த உண்மைகளின்), மிகவும் தீவிரமான தன்னைப் பற்றியதும், தான் சார்ந்த அமைப்பு பற்றியதும் அல்லது நம்பிக்கை பற்றியதுமான சுயபரிசோதனையே முன்னிறுத்தப்படவும் வேண்டும்.


No comments:
Post a Comment