Thursday, January 14, 2021

மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 03) மட்டக்களப்பு மாவட்டம்.

- ஏ.எம். றியாஸ் அகமட்

அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்
”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும்.
இவைதான் முடிவடைந்த பட்டியல் அல்ல. சில ஐயப்பாடுகளும் இருக்கின்றன. நீங்களும் திருத்தலாம். சேர்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட ஊர்கள்
1. மாங்கேணி
2. புனானை
3. பனிச்சங்கேணி
4. வட்டவான்
5. வாகரை
6. கதிரவெளி
7. பால்சேனை
8. மாஞ்சோலை
9. ஓட்டமாவடி
10. பாலைநகர்
11. கறுவாக்கேணி
12. கும்புறுமூலை
13. வாழைச்சேனை
14. பெரியபுல்லுமலை
15. மரப்பாலம்
16. வேப்பவட்டுவான்
17. கொடுவாமடு
18. மாவடிவேம்பு
19. களுவன்கேணி
20. சித்தாண்டி
21. மஞ்சந்தொடுவாய்
22. நாவற்குடா
23. நொச்சிமுனை
24. பாலமீன்மடு
25. புன்னைச்சோலை
26. கருவேப்பங்கேணி
27. தாண்டவன்வெளி
28. தாமரைக்கேணி
29. புளியந்தீவு
30. ஆரையம்பதி
31. காங்கேயனோடை
32. மாவிலங்கத்துறை
33. தாழங்குடா
34. அம்பிலாந்துறை
35. அரசடித்தீவு
36. கடுக்காமுனை
37. மகிழடித்தீவு
38. முனைக்காடு
39. கொக்கட்டிச்சோலை
40. மண்டூர்
41. வெல்லாவெளி
42. காக்காச்சிவட்டை
43. பாலையடிவட்டை
44. விளாந்தோட்டம்
45. நெல்லிக்காடு
46. பலாச்சோலை
47. வீரன்சேனை
48. தும்பன்கேணி
49. வன்னிநகர்
50. மாங்காடு
51. தேத்தாத்தீவு
52. பட்டிருப்பு
53. மகிழூர்
54. இலுப்படிச்சேனை
55. பாவற்கொடிச்சேனை
56. காஞ்சிரங்குடா
57. கரயாக்கந்தீவு
58. குறிஞ்சாமுனை
59. பருத்திச்சேனை
60. ஈச்சந்தீவு
61. நாவற்காடு
62. விளாவெட்டுவான்
63. மகிழவெட்டுவான்
64. உன்னிச்சை
65. நரிப்புல்தோட்டம்
66. ஆயித்தியமலை

மாங்காடு என்பதில், சாதாரண மா என்பதை உணர்வதைவிட, காட்டுமா என்றொருவகை உள்ளது, 50 அடி வரை வளரும், கரிய பச்சை சிறிய இலைகள், காய்களும் சிறியவை இலுப்பை காய் அளவில் இருக்கும், சுவையான பழங்கள். கொம்மாதுறையில் புகையிரத வீதியருகில் 1980 வரை நிறையவே இருந்தன. அழிக்கப்பட்டுவிட்டன.

Seenivasan Giridaran
 ஆமாம். உண்மை. அது சுதேசிய வகை. இந்த காட்டுமா சம்பந்தமாக 
Slm Hanifa
 அருமையான பதிவொன்றை நீண்ட நாட்களுக்கு முன் இட்டிருக்கிறார். தேடிப் பார்க்க. படிக்க. நிறைய விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது.

மருங்கை நகர்

Ollikulam

கின்னியடி

திருக்கொண்டையடிமடு
ஓட்டமாவடிக்கு அங்கால இருக்கு சேர்

கூழாவடி, அரசடி, புன்னைச்சோலை, நாவலடி, பனிச்சையடி, 

மட்டக்களப்பு மாநகரம் 70 80 முன்னைய காலங்களில் புளியந்தீவு என அழைக்கப்பட்டது




மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 2) யாழ்ப்பாண மாவட்டம்.

-ஏ. எம். றியாஸ் அகமட்

அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்
”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும்.
இவைதான் முடிவடைந்த பட்டியல் அல்ல. சில ஐயப்பாடுகளும் இருக்கின்றன. நீங்களும் திருத்தலாம். சேர்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட யாழ்ப்பாண ஊர்கள்
  1. இருபாலை
  2. இளவாலை
  3. ஏழாலை
  4. குப்பிளான்
  5. குரும்பசிட்டி
  6. கொக்குவில்
  7. சண்டிலிப்பாய்
  8. சில்லாலை
  9. சிறு விளான்
  10. திருநெல்வேலி
  11. பலாலி
  12. பன்னாலை
  13. புன்னாலைக்கட்டுவன்
  14. பெரியவிளான்
  15. பொன்னாலை
  16. மாசியப்பிட்டி
  17. மாதகல்
  18. மாவிட்டபுரம்
  19. மானிப்பாய்
  20. வட்டுக்கோட்டை
  21. வடலியடைப்பு
  22. வயாவிளான்
  23. அறுகுவெளி
  24. அல்லாரை
  25. கிளாலி
  26. கேரதீவு
  27. கொடிகாமம்
  28. சரசாலை
  29. தச்சன்தோப்பு
  30. நாவற்குழி
  31. நுணாவில்
  32. மீசாலை
  33. ஆத்தியடி
  34. கட்டைக்காடு
  35. தும்பளை
  36. துன்னாலை
  37. நெல்லியடி
  38. பருத்தித்துறை
  39. புகலிடவனம்
  40. மணல்காடு
  41. மருதடிக்குளம்
  42. முள்ளியான்
  43. வெற்றிலைக்கேணி
  44. விடத்தல்பளை
  45. காரைதீவு
  46. புங்குடுதீவு
  47. வேலணை
  48. பெருங்காடு
  49. காரைநகர்
  50. அல்லைப்பிட்டி
  51. சரவணை
  52. பரித்தியடைப்பு
  53. புளியங்கூடல்
  54. வேலணை
  55. ஆலங்கேணி
  56. காரைநகர்
  57. சாமித்தோட்டமுனை
  58. பூமுனை
  59. மாவலித்துறை
வேம்படி
முடமாவடி
பூநாறிமரத்தடி
கொண்டலடி
இலந்தை கலட்டி
மஞ்சவனப்பதி
அரசடி
சாமியின் தோட்டம்
அல்லாரை
அறுகுவெளி
ஈஞ்சடி
கள்ளியம்காடு
பொன்னாலை
தில்லையம்பலம்
நெல்லண்டை
மந்துவில் ---

அரசடி (மாவிட்டபுரம்), ஆலடி {இளவாலை)


'புளி'யம்பொக்கணை
'மா'ங்குளம்
கிளி 'நொச்சி'
'நெல்லி'யடி
'பருத்தி'த்துறை
'முல்லை'த்தீவு
'மல்லிகை'த்தீவு

இலந்தைக்குளம், புங்கன்குளம், கொய்யாத்தோட்டம், ஈச்சமோட்டை, விளாத்தியடி, நாவலடி (இவ்விடங்கள் யாழ்ப்பாணம் கொழும்புத்துறைக்கு அண்மையில்), அத்தியடி, இலுப்பையடி (சந்தி).

வட்டுக்கோட்டை வழியிலேயே அருகருகாக மாவடி ,புளியடி.
75 ஆண்டுகளுக்குமேலான 25 இலுப்பை மரங்கள் நின்றது கண்ணகை அம்மன் கோவிலில் . ஆலயத்தைமூடி வேலியிட்டு அத்தனை இலுப்பை மரங்களையும் வெட்டி வெறுவளவாக இருக்கு கோயில் நிலம்.

முல்லைத்தீவு :மாஞ்சோலை கேப்பாபிளவு:தேக்கங்காடு நாயாறு:புளியமுனை கொக்கிளாய்:தென்னைமரத்தடி வலயர்மடம்:இடைக்காடு தண்ணீர்றூற்று:ஆலடிச்சந்தி

தாழையடி.
மருதங்கேணி,
நாவலடி
பன்னக்கட்டை,
புளியடி
மருதடி,
வேம்படி,
ஆலையடிவேம்பு,
பூவரசங்குளம்,
வேப்பங்குளம்,
சின்னப்பூவரசங்குளம்,
மருதோடை,
மல்லிகைத்தீவு,
விளாங்காடு,
கள்ளியங்காடு

வணக்கம்
இந்த படத்தில் இருக்கும் மரம்மாதிரி
சாவகச்சேரி பெரியமாவடி என்ற இடத்தில்
கச்சாய் கடலோறம் ஆகப்பழைய மரங்கள் உள்ளது.

Urumpiraai

நெல்லியடி, வெற்றிலைக்கேணி, புளியம்பொக்கணை, ஆலடி, அரசடி, காரைதீவு, புங்குடுதீவு எனப் பல உண்டு

urumpiraay...
"piraay" enpathu oru maram.

பிராய்- பராய்
பராய் மருவி பிராய் என ஆனது. தமிழ்நாட்டில் திருப்பராய்த்துறை உள்ளது. பராய் மரங்களை நான் கண்டதில்லை

Vivek Thamotharampillai
 புங்கம் மரம் புங்குடுதீவில் அழிந்தது போல் பராய் மரமும் உரும்பிராயில் அழிந்து விட்டதாகவும், இப்பொழுது அம் மரக்கன்றை உரும்பிராயில் ஒரு கோயிலில் மீள்னடுகை செய்துள்ளதாகவும் பதிவுகள் கூறுகின்றன.

வரணி- (மாவிலங்கு)


3

மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 1) அம்பாறை மாவட்டம்.

ஏ.எம். றியாஸ் அகமட்

அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து

கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்
”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும்.
இவைதான் முடிவடைந்த பட்டியல் அல்ல. சில ஐயப்பாடுகளும் இருக்கின்றன. நீங்களும் திருத்தலாம். சேர்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட அம்பாறை மாவட்ட ஊர்கள்
1. சாளம்பக்கேணி
2. வீரமுனை
3. செந்நெல்கிராமம்
4. மல்வத்தை
5. மல்கம்பிட்டி
6. மருதமுனை
7. சேனைக்குடியிருப்பு
8. சாய்ந்தமருது
9. காரைதீவு
10. மாவடிப்பள்ளி
11. பாலமுனை
12. கருங்கொடித்தீவு
13. பட்டியடிப்பிட்டி
14. இசாங்கனிச்சேனை
15. ஆலையடிவேம்பு
16. நாவற்காடு
17. கோளாவில்
18. பாணன்காடு
19. அளிகம்பை
20. தம்பட்டை
21. காஞ்சிரங்குடா
22. தாண்டியடி
23. குண்டுமடு
24. களப்புக்காடு
25. பசறிச்சேனை
26. சங்கமாங்கண்டி
27. கோமாரி

நல்லதொரு பதிவு. எங்கள் ஊரின் பழைய பெயரான கருங்கொடித் தீவு விடயத்தில் நீங்கள் சொல்வது உண்மை. கருங்கொடி என்றால் எந்தக் கொடி என்றே தெரியாமல் போயிற்று.

மாவடிப்பள்ளி, வரிப்பத்தான்சேனை, ஆலையடிவேம்பு, தாழைவெட்டுவான்

பனங்காடு, இத்தியடி 


தேத்தாத்தீவும், தேத்தாமரங்களும்: ஊரின் பெயர்களிலுள்ள சுதேசிய மரங்களும், அவைகளை மீளுருவாக்கலும் -


அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து
கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. அதற்கு நான் சொல்லும் இலகுவான பதில்

”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும். இந்த வகையில், ”தேத்தாதீவு” என்ற ஊரின் பெயரிலுள்ள தேத்தா மரங்களை எனது வீட்டில் உருவாக்கி கொண்டிருக்கின்றேன். இதற்கான விதைகளை வேர்கள் அமைப்பினர் சேகரித்து தந்திருந்தனர். இந்த மரங்களை ”தேத்தாத்தீவைச் சேர்ந்த சக்கரவர்த்தி மேல்கொண்ட அன்பின் நிமித்தம்” உருவாக்குகிறேன் என்றும் கூறலாம். வேர்கள் அமைப்பும், வேர்கள் றமேசும் தேத்தாதீவைச் சேர்ந்தவர்கள் என்பதும் கூடுதல் தகவல்.

தேத்தா மரம்

Strychnos potatorum என்கின்ற விஞ்ஞானப் பெயரையுடைய தேத்தா மரமானது (clearing-nut tree தேத்தா, ඉඟිනි) 40 அடிக்கு மேல் வளரும் இலையுதிர்க்கின்ற, அயனமண்டல கிழக்காசியாவுக்குரிய சுதேசிய மரமாகும். மிகுந்த மருத்துவ குணமும் கொண்டது. இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னர் கிணறுகள் கட்டும்போது, அடிப்பகுதி கொட்டுக்கள், தேத்தா மரத்தினாலேயே செய்யப்பட்டு பதிக்கப்படுவது வழக்கம். தேத்தாக் கொட்டைகள் நீரிலுள்ள மாசுக்களையும், கடினத்தன்மையயும் அகற்றும் தன்மையும், நீரினைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மையும் கொண்டன.
இழந்துபோன தேத்தா மரங்களை மீட்டெடுப்போம். தேத்தா மரங்களைக் கெண்டாடுவோம். அவைகளை மீட்கப்போகும் தேத்தாத்தீவாரையும் கொண்டாடவோம். தேத்தா வாழ்க.





பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...