(சிங்கராஜவனம் உட்பட) பல்லாயிரக்கணக்கான விதைப்பந்துகளை வேர்கள் அமைப்பினரால், இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று (10.12.2020), மட்டக்களப்பு வனபரிபாலன தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேர்கள் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் றமேஸ் சிவநாயகம், ஆசிரியர் அவர்களும், அதன் அங்கத்தவர்களும், மாவட்ட வனபரிபாலன அதிகாரி பிறனீத் சுரவீர, உதவி மாவட்ட வனபரிபாலன அதிகாரிகள் அஜித், ஜாயா, ஆகியோரும் விமானப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மரங்களுக்கு மொழிகளும் இல்லை. பிரதேசங்களுக்கும் இல்லை. அதற்குத் தெரிந்ததெல்லாம் நஞ்சை உறிஞ்சி நல்லதாய்த் தருவது. நன்மை பயப்பது. நன்றி. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். பயணங்கள் முடிவதில்லை. தொடரும்.
-----

No comments:
Post a Comment