Monday, June 1, 2020

சமீப நாட்களாக எனது காலை களப் பயணங்களில் ஒரு வகை புகையை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது. அது எங்களது தமிழில் ”பனி” என்று கூறுவார்கள். ஆனால் அது பனி இல்லை. ஏனெனில் அதனைச் சுவாசிப்பதற்கு விருப்பாக இருப்பதில்லை. இன்றும் எனது வேலை செய்யும் இடத்திற்கு வேலைக்கு செல்லும்போது, மாவடிப் பள்ளிப் பகுதியில் வீதயெங்கும், வயலெங்கும் புகையாக இருந்தது. டெல்லி மாசு இங்கும் வந்துவிட்டது. நாடுகளுக்கு அரசியல் எல்லையே இருக்கின்றதே தவிர சூழலியல் எல்லைகள் இல்லை. சூழலியல் நோக்கில் உலக ஒரு பிரதேசம் போன்றது. ஒரு மூலையில் ஏற்படுத்தப்படும் பாதிப்பு இன்னொரு மூலையைப் பாதிக்கும். கப்பலின் அடித்தட்டு ஓட்டையானால் என்ன நாங்கள் மேல் தளத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில் உள்ளவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது எமது உலகு. நாங்களும் ஆபத்திலிருக்கிறோம்.











No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...