மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லுாரியில், உயர்தரப் பிரிவில் 2003ம் ஆண்டு தங்களது கற்கையை மேற்கொண்ட, அந்தக் கல்லுாரியின் பழைய மாணவர்கள் அமைப்புகளில் ஒன்றான ”SMC 03’ Batch” யின் வருடாந்த மூன்றாவது ஒன்றுகூடல் மட்டக்களப்பு புளு லகூன் விடுதியில் (Blue Lagoon Rest In) நேற்று நடைபெற்றது. அந் நிகழ்வில் என்னையும், வேர்கள் அமைப்பினரையும் (பிரதம செயற்பாட்டாளர் ஆசிரியர் றமேஸ் சிவஞானம் உட்பட மேலும் மூன்று செயற்பாட்டாளர்கள்) விருந்தினர்களாக அழைத்திருந்தார்கள். பசுமையாக்கல் நடவடிக்கை சம்பந்தமாக ஒரு உரையாற்றினேன். பின்னர் ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றது. எங்களது பணிகளுக்கு ஒத்துழைத்து முன்னெடுத்துச் செல்வதற்கு பல்வேறு விடயங்களை முன்மொழிந்தார்கள். மிகவும் உயிர்ப்பான நிகழ்வாக அது அமைந்து முடிந்தது. பல துறைகளிலும் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களைக் கொண்ட அமைப்பு அது. அவர்களுக்குள் எவ்வித வேறுபாடும் இல்லாமல் பழகியதும், பழையதை மீட்டதும், குதுாகலித்ததும் மிக மகிழ்வான அழகிய தருணங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. வழமையாக கூடிக் கலையும் பத்தோடு பதினொன்றான பழைய மாணவர்களின் அமைப்புகள் போலில்லாமல், சமூகத்திற்கும், சுற்றுச்சூழலிற்கும் தங்களாலான பணிகளை செய்ய முன்வந்திருப்பது அவர்கள் மேலுள்ள மரியாதையை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்கின்றது. உண்மையில் நீங்கள் முன்னுதாரணமானவர்கள். மட்டக்களப்பின் அழகிய பிள்ளைகள். வரலாறு உங்களை எழுதிச் செல்லும்.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Subscribe to:
Post Comments (Atom)
கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்
வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...

-
ஏ . எம் . றியாஸ் அகமட் , சிரேஸ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் . பொலித்தீன் பாவனையை அரசாங்கம் தடைசெய்யத் த...
-
ஏ.எம். றியாஸ் அகமட், சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம். அறிமுகம்: மண், தாவரங்கள், விலங்கினங்கள். மனிதனின் உடல் நலம் ஆக...
-
– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...
No comments:
Post a Comment