-அம்ரிதா எயெம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvJgj_fMIM7LCNr8MNshGYU0zG_4fC489xKzqJCxfia6Gi2UhICKB2PjEcFuHG5zjoczulSJF_kgg1aglp-7JQik_AIivwk5Cf6pieks88nebuQ4NCP8yR9oBfk2Y7fsKIyGLPtbpWbH0/s320/put1.jpg)
அம்பாரை வீதியால் சென்று நீத்தை வழியாக, அல்லது திருக்கோவில் சாகாமம் வழியாக அல்லது அக்கரைப்பற்று பனங்காடு வழியாக மூன்று வழிகளிலும் போவதுண்டு. எந்த வழியால் சென்றாலும், போக்குவரத்துச் செய்வதற்கே தகுதியற்ற மிக மிக மோசமான பாதைகள். உயிருக்கே உத்தரவாதமில்லாத காலம். நமக்கு உயிர் ம.. மாதிரி இருந்த காலம். அப்போது புட்டம்பையைக் கடக்கும் போதெல்லாம் ஆறுதலாக மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி அந்தப் பள்ளிவாசல், மத்ரசா எல்லாவற்றையும் பார்ப்பதுண்டு (இது தற்கொலை முயற்சிக்கு சமனானது. கண்ணகிபுர மலையிலிருந்தும் ஆபத்து வருகிற காலம்). அந்த அறபு எழுத்துக்களை வாசிப்பதுண்டு. இந்த கொடுந்துயரத்தின் வலி எப்போதும் பாரமாக இருப்பதுண்டு. இது போலவே மற்வர்களுக்கும் வரலாறுகள் இருக்கலாம். யாராக அவர்கள் இருந்தாலும், தாங்கள் பூர்விகமாக வாழ்ந்த இடத்திலிருந்து வெட்டி கொலைசெய்து துரத்தப்படுவது துயரமானதுதான்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4aiBKits9-ZAzBy78tjRe91W2qWfTH_i7ZMosLfOkjLPIBNOxogqGmtKLQGI0qyyukFRJ-k5FsWdOj1Rdtr0IyHsK_LRK0OzHFvSfeyFUP1cS18cTAtxzLYwwtQTV6dbSBISsxW8BLlE/s1600/put2.jpg)
No comments:
Post a Comment