- அம்ரிதா ஏயெம்

*
திக்குவல்லை கமால், 19550 மார்ச், 03ம் திகதி இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தின் திக்குவல்லை என்ற கிராமத்தில் பிறந்தவர். இயற்பெயர் முகம்மது ஜலால்தீன் முகம்மது கமால். கவிதைத் தொகுதிகள் சிறுகதைத் தொகுதிகள் (ஆறு அல்லது அதனைவிட அதிகம்), நாடக எழுத்துரு தொகுதிகள் (நான்கு அல்லது அதனைவிட அதிகம்), சிறுவர் இலக்கியம் (இரண்டு அல்லது அதனைவிட அதிகம்), கட்டுரைத் தொகுதிகள், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் (சிங்களத்திலிருந்து) (மூன்று அல்லது அதனைவிட அதிகம்) போன்ற நூற்களுக்கு சொந்தக்காரர். குருட்டுவெளிச்சம் (1993), விடை பிழைத்த கணக்கு (1996), புதியபாதை (1997) போன்ற இவரின் சிறுகதைத் தொகுதிகளிலுள்ள சிறுகதைகள், எங்களுக்கு பேச்சு வழக்கில் முற்றிலும் அந்நியப்பட்ட திக்குவல்லை கிராமத்து மக்களின் பேச்சு வழக்கில் சிறப்பாகக் கொண்டமைந்ததன் காரணமாக, அவைகளின் மீது எனக்கு அதீத வாசக ஈர்ப்பும், அதிர்வும் ஏற்பட்டது.
*
*

இளம் பிறையே நீ இயம்புவாய்
முகில்வானத் திரைநீக்கி
முகம்காட்டும் இளம்பிறையே!
முகம்காட்டும் இளம்பிறையே!
ஏன்
இருட்டுக் குகைக்குள்ளே
சற்றே சுகம்பரவ…..
விளக்காகக் கூடியேறி
ஒளிபரப்பு….
இருட்டுக் குகைக்குள்ளே
சற்றே சுகம்பரவ…..
விளக்காகக் கூடியேறி
ஒளிபரப்பு….
முடியாதா?

எரியும் என்இளமைச்
சோகப் புகைமூட்டம்
தொலைய என்கழுத்தில்
காதாலியாய் வந்து
சங்கமிப்பாய்….!
மாட்டாயா?
முற்றத்து மண்பிசைந்து
அப்பம் அவிப்பதிலே
சிந்தை மயங்குகின்ற
சின்னத் தங்கையவள்
பசிவயிற்றை
அப்பத்தின் விளிம்புடைவாய்த்
தொட்டு முத்தமிடு…!
அப்பம் அவிப்பதிலே
சிந்தை மயங்குகின்ற
சின்னத் தங்கையவள்
பசிவயிற்றை
அப்பத்தின் விளிம்புடைவாய்த்
தொட்டு முத்தமிடு…!
இத்தனைக்கும் பின்னாலும்
ஏனின்னும் அசைந்தசைந்து
மெல்ல மறைகின்றாய்…?
ஏனின்னும் அசைந்தசைந்து
மெல்ல மறைகின்றாய்…?

ஏழ்மை மைதொட்டு
காற்றுப் படிவத்தில்
எழுதும் விண்ணப்பம்
பலநூறாய்க் குவிகின்ற
தொல்லைதான் காரணமோ?
இயம்பிடுவாய்..!
- திக்குவல்லை கமால் (யாழ்பிறை, 1975)
*
பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராய் பணியைத் தொடங்கிய தி.க. அவர்கள் கல்வி அதிகாரியாய் ஓய்வுநிலை அடைந்தார்கள். அவரின் பிறந்த நாள் மார்ச் 03 (கொஞ்சம் பிந்திவிட்டது). அவருக்கு எங்களின் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, மேலும் அவரின் ஆயுளை நீட்டி, சுகத்தையும் கொடுத்து, அவரின் இலக்கியப் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகின்றோம்.
பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராய் பணியைத் தொடங்கிய தி.க. அவர்கள் கல்வி அதிகாரியாய் ஓய்வுநிலை அடைந்தார்கள். அவரின் பிறந்த நாள் மார்ச் 03 (கொஞ்சம் பிந்திவிட்டது). அவருக்கு எங்களின் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, மேலும் அவரின் ஆயுளை நீட்டி, சுகத்தையும் கொடுத்து, அவரின் இலக்கியப் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகின்றோம்.
No comments:
Post a Comment