Thursday, December 26, 2019

இன்னும் வராத சேதி



-அம்ரிதா ஏயெம்

க.பொ.த. உயர்தரத்தில் எனக்கு பௌதீகவியலை கற்றுத் தந்த மிகவும் கண்டிப்பான ஆசிரியை. எனது பல்கலைக்கழக கல்வி. ஆய்வு போன்றவற்றை மிகுந்த சவால்களுக்கு மத்தியில் திசைப்படுத்தியவர். பின்னொரு காலத்தில் எனது பௌதிகவியல் ஆசிரியை மிகச் சிறந்த கவிஞை என நண்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டேன். நானும் எழுதுகிறவன் என்று அறிமுகமானபோது சந்திக்கும் நேரமெல்லாம் எழுத்துக்களையும் இலக்கியங்களைச் சுற்றியே கதைகள் உலவித் திரிந்து எனது தனிப்பட்ட கல்வி முன்னேற்றத்தின் அக்கறையுடன் முற்றுப் பெறும்.

யுவனேஸ்வரி என்ற இயற்பெயரையுடைய கவிஞை ஊர்வசி யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள கருகம்பனையைச் சேர்ந்தவர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பௌதிக விஞ்ஞான பட்டதாரியான இவர் கிழக்கு மாகாணம் காரைதீவு> மருதமுனை பகுதிகளில் ஆசிரியையாகவும் அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரி> மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி போன்றவைகளில் விரிவுரையாளராகவும் பின்னர் மட்டக்களபு;பு கல்வியயற் கல்லூரியின் பிரதி பீடாதிபதியாக கடமையாற்றி ஓய்வுபெற்றார். பெண் என்ற அடையாளத்தைக் கொண்ட ஊர்வசியின் கவிதைகளை விட்டுவிட்டு தமிழின் பெண் கவிதைப் பரப்பையும் அரசியல் கவிதைப் பரப்பையும் கதைக்க முடியாது. அவரது பழையதும் பதியதுமான கவிதைகள் தொகுப்பாக இன்னும் வராத சேதிகள் என்ற பெயரில் காலச்சுவடு வெளியீடாக (2014) வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...