

அன்றிலிருந்து அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை வரை, நான்கு நான்காக, ஐந்து ஐந்தாக மாணவர்கள் வந்து காலில் விழுந்து காலைத் தொட்டு மரியாதை செலுத்திக் கொண்டே இருந்தார்கள். எங்கள் மதத்தில் இதற்கு அனுமதி இல்லை இருந்தும், சமாளிக்க முடியவில்லை. என்னிடம் படித்து தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் வௌ;வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், காலில் விழுந்து கொண்டே இருந்தார்கள். நான்கு வருட மாணவர்களில், இரண்டு வருட மாணவர்கள் விடுமுறையில் நிற்கின்றார்கள். இதற்குள் அது வேறு.
தங்களது அன்பை எனக்கு உடனடியாக காட்டத் தொடங்கினார்கள் வெவ்வேறு வகையான அன்பளிப்புக்களாக. என்னைப் பற்றி அவர்களிடம் நான் கூறியதுகூட கிடையாது. எனது ஊர், குடும்பம், நிலைமை எதுவுமே தெரியாது. நானும் கூறியது இல்லை. எழுதிக் கிழிப்பவன் என்று கூட தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்;லாம் கற்பிக்கும், ஆய்வுசெய்யும் நான்தான்.
”இன்னொரு இடத்தில் உங்களைப் போல உள்ளவர்களுக்கு நான் தேவைப்படுகிறேன். நான் அங்கு போகவேண்டும். அவர்களில் நான் உங்களைக் காண்பேன்” என்று இறுதி நாளன்று கூறினேன். அவர்களில் எங்களைக் காணலாம், நாங்கள் உங்களை இங்கே காண்போமா? என்றார்கள்.
பெரும்பாலான மாணவர்கள் அவர்களின் தந்தையை என்னில் காண்பதாக கூறினார்கள். எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி என்ன செய்து விட்டேன் கற்பித்தலுக்கு அப்பால், அவர்களின் தங்குமிடம், உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, உளவளம், தொழில் வழிகாட்டல் போன்றவைகளில் ஓரளவு தனிப்பட்ட அக்கறை எடுத்ததைத் தவிர.
நான் தந்தைதான்
ஓராயிரம்பேருக்கு தந்தைதான்
பெருமையாக இருக்கிறது.
இன்னும் அழுது கொண்டே இருக்கின்றேன்.
பிள்ளைகளைப் பிரிந்த வலிகளோடு.
ஓராயிரம்பேருக்கு தந்தைதான்
பெருமையாக இருக்கிறது.
இன்னும் அழுது கொண்டே இருக்கின்றேன்.
பிள்ளைகளைப் பிரிந்த வலிகளோடு.

No comments:
Post a Comment