Monday, July 18, 2016

ஆறு

நான் கால் தழுவி 
குனிந்து கழுவி 
ஸ்நானம் செய்து 
மீன் பிடித்து
 தவளை துரத்தி 
முதலை விலக்கி 
அமிழ்ந்து நீந்தி 
சுழியோடி 
பட்டங்கள் எடுக்க 
காலாக இருந்த ஆறு. 
ஐந்தாகி
நான்காகி 
பின் மூன்றானது. 
இரண்டாகி 
ஒன்றாகுமுன்னே 
ஒன்றாகுவோம்.

No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...