Monday, July 18, 2016

ஆறு

நான் கால் தழுவி 
குனிந்து கழுவி 
ஸ்நானம் செய்து 
மீன் பிடித்து
 தவளை துரத்தி 
முதலை விலக்கி 
அமிழ்ந்து நீந்தி 
சுழியோடி 
பட்டங்கள் எடுக்க 
காலாக இருந்த ஆறு. 
ஐந்தாகி
நான்காகி 
பின் மூன்றானது. 
இரண்டாகி 
ஒன்றாகுமுன்னே 
ஒன்றாகுவோம்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...