Monday, July 18, 2016

முருகைக் கற்கள்



முருகைக் கற்கள்

- அம்ரிதா ஏயெம்

நீலத் திரையின் கீழே
மச்ச வெளியின் ஊடே
வண்ணங்கொண்டு குழைத் தெடுத்த
ஒரு ஓவியக்காடு.
வெண்மையாயொரு காடு
உறுதியாய் தாங்க
பசுமையாயொரு காடு
ஒளி தொகுக்க
நீலமாயொரு காடு
இரையாக மாற
கருமையாயொரு காடு
இரை கொல்லியாக
செம்மையாயொரு காடு
திகில் கொடுக்க
மண்ணிறமாயொரு காடு
வன்முறைகள் செய்ய
மஞ்சளாயொரு காடு
மறைந்து ஒழிக்க
நடத்தைக் கோலங்களின்
கும்மாளம்
வண்ணங்கொண்டு குழைத் தெடுத்த
ஓவியக்காடு.

No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...