Monday, July 18, 2016

மகள் - 04

சிறகுகள் சிதைந்த 
சிறு பறவை ஒன்று
நிறை பறவைகளுடனும்,
முதிர் பறவைகளுடனும்
வானத்தை தொட்டுவிட போட்டி
சற்றும் சளைக்காமல்
வானத்தை வென்றது.
மகளே
வெல்லாதிருந்திருந்தாலும்
பங்குபற்றி எதிரிக்கு
நெருக்கடிகொடுத்த
வரலாறு முக்கியம்.
உனக்கான உலகில் 
சமனான சிறகுகள் இல்லாது போனாலும்
ஒரு இரவில் 
உன் சிறகுகள் உதிர்ந்து தொலைந்தாலும்
ஒரு வேளை பறக்கவே முடியாது போனாலும்
நீ வானம் தொடுவாய்
ஏனெனில் 
நீ அக்கினிச் சிறகின் குஞ்சு.





No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...