குறிப்பு -


ராஜாவிற்கும், மணிக்கும் Money சம்பந்தமான பிரச்சினை வந்தபோது. அது புலமைசார் சொத்து உரிமை (Intelectual Property Rights) என்ற மணிச் சத்தமாக ஒலித்தது. புலமைசார் சொத்து உரிமை என 16 பக்க கட்டுரை போட்ட சஞ்சிகைக்காரர்களே, வறுமையின் “பிடியிலுள்ள” எழுத்தாளர்களின் நூலை வெறும் 20 நூற்களை றோயல்டியாக கொடுத்துவிட்டு வெளியிடுகிறார்கள். இந்த மணிச் சத்தங்கள் புலமைசார் சொத்துரிமை எவ்வாறு உயிரினப் பல்வகைமையில் விளையாடுகிறது என்ற விடயத்தை எழுதியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.
புலமைசார் சொத்துரிமையும் உயிர்க் கொள்ளையடிப்பும்
-அம்ரிதா ஏயெம்
1) உயிர்ப்பல்வகைமையின் உரிமை


இத்தாவரத்திலிருந்து பெறப்படும் ஒரு வகையான alkalites வகையான புற்றுநோய்களிற்கு மருந்தாகும். இந்த மருந்தின் உற்பத்தியால் வருடத்திற்கு 100 மில்லியன் டொலர் வருமானமாக கிடைத்தாலும் இந்த தாவரத்தை பாரம்பரியமாக உபயோகித்து வந்த நாடான மடகஸ்கார் உரிமைகளற்று நிற்கிறது.
2) புலமைசார் சொத்து உரிமை ( Intellectual Property Rights)
2.1) Bioprospecting and Biopiracy
2.1) Bioprospecting and Biopiracy
விவசாயம், உயிர்தொழில்நுட்பம், மருத்துவ துறைகளிற்கு தேவையான உயிர்இரசாயன, பரம்பரை வளங்களை உயிர்ப்பல்வகைமையிலிருந்து தேடிப்பெறுதல் Bioprospecting எனப்படும். இவ்வகையான தேடுதலில் உயிரினங்களின் தன்மை ஆராயப்பட்டு, தமது தேவைக்கான மூல இராசயனப் பொருள் கண்டுபிடிக்கப்படும். உதாரணமாக இயற்கையாக காணப்படும் தாவரங்கள் அல்லது விலங்குகளிலுள்ள மருந்துகளாக உபயோகிக்ககூடிய பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்படுதல். இதற்கு பல தாவர விலங்குகள் பரிசோதிக்கப்பட வேண்டும்.

உயிர்ப்பல்வகைமை உடன்படிக்கையில் ~உயிர்ப்பல்வகைமையின் உபயோகங்கள் சமனாகப் பங்கிட வேண்டும்~ எனும் பகுதி காணப்பட்டாலும் வர்த்தக ரீதியான உபயோகத்திற்கான pயவநவெ உரிமைகளை பெறுவதற்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படவில்லை. இதனால் மேற்கூறியவாறு விஞ்ஞான முன்னேற்றமடைந்த நாடுகள் உயிர்ப்பல்வகைமை அதிகம் காணப்படும் வறிய நாடுகளை கொள்ளையடிப்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
3) சர்வதேச அறிவுச்சொத்து உரிமை சட்டம் (International Intellectual Property Rights Law (IPR))
இது புதிய கண்டுபிடிப்புகள் மற்றவர்களால் உபயோகப்படுத்தாது பாதுகாக்கிறது. இது உயிர்ப்பல்வகைமை உடன்படிக்கைக்கு எதிர்மாறானதாகும். இதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக நடவடிக்கை சம்பந்தப்பட்ட அறிவுசொத்து உரிமை உடன்படிக்கையின் ((Agreement on trade related aspects of intellectual property rights TRIPS)) மூலம் உலக வர்த்தக தாபனம் (World trade organization WTO) உருவாக்கப்பட்டது. இத்தாபனத்தின் அங்கத்துவ நாடுகள் பதிப்புரிமை, அறிவுச்சொத்துரிமை என்பவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளன. இதனால் பொதுச்சொத்தாக கருதப்படும் அறிவு தனியாரிற்கு சொந்தமாக்கப்;படும். மூன்றாம் உலக நாடுகளில் தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் உரிமைகளை இழக்கும் தன்மையையும் இவ்வுடன்படிக்கை ஏற்படுத்துகிறது. பூகோளமயமாதல் செயற்பாட்டின் போது உருவாகும் திறந்த வர்த்தக கொள்கைகள் இக்கொள்ளையடிப்புகளுக்கு மேலும் ஏதுவாக இருக்கிறது.
பல வளர்முக நாடுகளில் காடுகளிலுள்ள மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களைப் பற்றிய அறிவு குறைவாகவே உள்ளது. எனவே பாரம்பரிய மருத்துவத்தில் உபயோகிக்கப்படும் தாவரங்களின் அழிவு நிலை பற்றி கூடுதலான அக்கறையும், அவற்றை செயற்கையாக பயிரிட வேண்டிய அவசியமும் இலங்கை போன்ற நாடுகளின் தார்மீக கடமைப்பாடாக இருக்கிறது.
No comments:
Post a Comment