ஏ.எம். றியாஸ் அகமட்
(சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம், வந்தாறுமூலை)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_jmddkgAZ3Ib4ydHnQ4Wx9dOftiklfvhAHKc_9X7frvhVGcKjYNfO84eXgD4UufKApf5wJPi_0bv6TuBAIhC4Tc1yA-CDmfo87dHPilgBp2AUXP8Gxo2h3W9zBBcvlk3snc-YRDzyV14/s1600/swm3.jpg)
இவைகளை நிவர்த்திக்கவும், புவியின் நிலைபேறான தன்மைக்கும் உதவக்கூடிய சில விடயங்களை குறிப்பிடச் சொன்னால், நான் முதல் இரு விடயங்களாக குறிப்பிடுவது, முதலாவது மரம் வளர்த்தல், இரண்டாவது திண்மக்கழிவு முகாமைத்துவம். காலப் பொருத்தம் கருதி திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் சிறிது கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன்.
வெளியீட்டின் மூலம் அல்லது ஒரு உற்பத்திமுறையின் அல்லது ஒரு நிகழ்ச்சியின் பின் பெறப்படும் பொருட்களை பொதுவாக கழிவுகள் எனலாம். இவை பொதுவாக பயனற்ற பொருட்களாகவே கருதப்படுகின்றன. உண்மையில் கழிவுகள் பிரயோசனமற்ற பொருட்கள் அல்ல. தற்போதைய நவீன நோக்கில் கழிவுகள் எனப்படுவது, பெறுமதியான பொருட்கள் பொருத்தமற்ற இடங்களில் காணப்படுவது என வரையறுக்கலாம். இரும்பு, செம்பு, பிளாஸ்ரிக், கண்ணாடி, கடதாசி, காட்போட், துணி, விபத்தில் அப்போதுதான் இறந்த ஆடு, மாடு, கோழி போன்றவைகள் காணப்படும் இடத்தைப் பொறுத்து அதன் பெறுமதிகள் வேறுபடும். எனவே திண்மக் கழிவானது நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, தொழிற்சாலைக்கு தொழிற்சாலை வேறுபடும். ஒரு இடத்தில் கழிவாக கருதப்படுபவை இன்னொரு இடத்தில் பொருளாதார முக்கியத்துவமிக்கவையாக கருதப்படும்.
கழிவுப் பொருட்களை சேகரித்தல், கொண்டு செல்லுதல், பாதிப்பில்லாத உருவுக்கு மாற்றுதல், மீள்சுழற்சிக்கு உட்படுத்தல், அல்லது நீக்குதல் மற்றும் கழிவுப் பொருட்களைக் கண்காணித்தல் போன்றவைகளைக் கொண்ட செயற்பாடு என திண்மக்கழிவு முகாமைத்துவத்தை வரைவிலக்கணப்படுத்தலாம். இதன் காரணமாக தாவர, விலங்கு, மனித, சுற்றுச்சூழல் நலன்களைப் பேணுவதோடு சூழலின் அழகிய தன்மையையும் பாதுகாக்கலாம் என்று கருதப்படுகின்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2fooQF68K4XxGpjLuiqCJlmqDxkf0MW5IBaiv4HpNshOXVAuEk5-mUAouYW7ZVd2t0i-qzF823Bal6gc9XoFMK9nMbJuus-xwZJmhkJ4EB3iI_nWtuTf1wYV0vH235qAINxGAjxyP8QE/s320/swm1.jpg)
முதலாவது எனது மாணவர்களுடன் (500க்கு மேற்பட்ட) நான் செய்த ஆய்வுகள். தங்களது பல்கலைக்கழக விடுமுறைக் காலங்களில், இலங்கையின் பல பகுதிகளிலும், தங்களது வீடுகளில் “மாதம் ஒன்றுக்கான வீட்டில் வெளியேற்றப்படும் திண்மக் கழிவுகளை இழிவளவாக்குவதற்கு எவ்வாறு முகாமைத்துவம் செய்யலாம்?” என்று செய்து பார்த்த ஆய்வவதானங்கள் இதற்குள் அடங்கும்;.
மாணவர்கள் தங்களது வீட்டில் வெளியேற்றப்படும் திண்மக்கழிவுகளை சேகரித்தார்கள். அதனை தரம் பிரித்தார்கள். இடமாற்றம் செய்தார்கள். பின்னர் பாதுகாப்ப்hன முறையில் அவைகளை அகற்றினார்கள். அதாவது சேகரித்த கழிவுகளை உக்கக்கூடியது, உக்கமுடியாதது எனப் பிரித்து. உக்கக்கூடியவைகளை சேதனப் பசளையாக்கலுக்கு உட்படுத்தினார்கள். உக்கமுடியாதவைகளை மீள்சுழற்சிக்குட்படுத்தக் கூடியவை, மீள்சுழற்சிக்குஉட்படுத்த முயாதவை எனப் பிரித்து, முதலாவது
போக இரண்டாவது எஞ்சின. அவைகளில் கற்கள் போன்றவைகளை பாவித்துவிட்டு, மிகுதியானவற்றை பாதுகாப்பாக அகற்றினார்கள். கிட்டத்தட்ட எல்லா மாணவர்களும் தங்களது வீடுகளில் உருவான அன்றைய மாதத்தின் திண்மக்கழிவுகளை மிகமிக குறைந்த அளவுக்கு இழிவளவாக்கினார்கள்.
பௌதிக கூறுகள்
(Physical Composition
in Wet Base) சதவீதம் (%)
சமையலறைக்
கழிவுகள் (Kitchen Waste) 61.0
கடதாசி (Paper) 10.4
உடுதுணிகள் (Textile) 2.15
மென்ரக பிளாஸ்ரிக் ; (Soft
Plastic) 1.8
கண்ணாடிப்
பொருட்கள் (Glass) 4.5
பீங்கான்
பொருட்கள் (Ceramic) 2.15
உக்கக்கூடியவை (Other
Compostables) 8.5
மற்றையவை (Others) 9.5
மொத்தம் (Total) 100
உக்கக்கூடியவைகள் (Compostables) 79.9
மீள்சுழற்சிக்குரிய அசேதனப்பொருட்கள்
(In-Organic Recyclables)
21.0
சம்பவக் கற்கை ஒன்றில், அந்தக் குடும்பத்தின் வீட்டிலிருந்து வெளியாக்கப்படும்
ஒரு மாதத்திற்கான திண்மக்கழிவின் பௌதீகக் கூறுகளின் சதவீதம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPsIQEg_lsrm-uEWeCjpTOnLep196D3-Mqdi6WvR4UZdSTIGtpP1-XKecAAkdDPJAkHdPPRm-4y2qM5Z-ibwf7u41w0ZvdwfGhdRk51UQwSrUd49q923MmhnhCVzhYm-K5vEyXuuPzP5U/s1600/swm5.jpg)
பௌதிக கூறுகள்
(Physical Composition
in Wet Base) சதவீதம் (%)
சமையலறைக்
கழிவுகள் (Kitchen Waste) 46.4
கடதாசி (Paper) 8.3
உடுதுணிகள் (Textile) 4.1
மென்ரக பிளாஸ்ரிக் ; (Soft
Plastic) 6.6
கண்ணாடிப்
பொருட்கள் (Glass) 1.7
பீங்கான்
பொருட்கள் (Ceramic) 4.6
உக்கக்கூடியவை (Other
Compostables) 23.5
மற்றையவை (Others) 4.6
மொத்தம் (Total) 100
உக்கக்கூடியவைகள் (Compostables) 69.9
மீள்சுழற்சிக்குரிய அசேதனப்பொருட்கள்
(In-Organic Recyclables) 16.6
சம்பவக் கற்கை இரண்டில், அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியாக்கப்படும் ஒரு நாளைக்கான பௌதீகக் கூறுகளின் சதவீதம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvMfYU4j_4zT3S7RixYjxO1P3Ma3iFQVzcpf9rXIAVGdOMfJff2CDo1j6JBi71w_QlsCMGAuttLw-zD1oQDjdA-lzDjDGglyaeFC4XI4OTvTcGn33nGm74B2VDdhEBYVdaHI9qXHL8g8c/s320/swm6.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4BH6YP_WGCmTAStugIpZS-JgVvmuTDJJ2J2gVIVrKGPeoSQg-eA5qsmH0gK-TepS5_SMaTVjl6IE3To8omP5B26MDzSSgrvDDVTPR4DvZD7XqRjxiBkTJ01QbaGmxU5qlmFmiaiOOp9s/s1600/swm7.jpg)
திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தின்போது 4R அடிப்படை அறிவைப் பயன்படுத்த வேண்டும்.
1) Reuse (மீள்பாவனை) – பிரிகையடையாத பதார்த்தங்களினால் ஆக்கப்பட்டுள்ள பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தல். உதாரணம்: பொலிதீன்
2) Reduce (குறைத்தல்) – தேவையில்லாமல் இவைகளைப் பாவிப்பதை தவிர்த்தல். உதாரணம:; வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர்க்கொல்லி, விற்றமின்கள், மருந்துகள் போன்றவற்றை பாவிப்பதை தவிர்த்தல்
3) Replace (மாற்றீடு) - சூழலுக்கு தீங்கிளைக்கும் பொருட்களுக்குப் பதிலாக நன்மை பயக்கும் பொருட்களை பயன்படுத்தல். எதாரணம்: இரசாயனப் பசளைகளுக்குப் பதிலாக சேதனப் பசளைகளை பாவித்தல்
4) Recycle (மீள்சுழற்சி) – மீள்சுழற்சிக்கு உட்படுத்தி பயன்பாட்டுக்குரியதாக மாற்றிக் கொள்ளல்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPRQqwuXztcnZhRRwAxP4IQNsTj60UZSb1ZES_lx62Sxq0IN9M_Zz2WH3AS_GNkzEo8JuBFQqnb8vp8MoBTMD7FCm1F2Vppxur0j-SVM3AOKN9FU3sKMpRnk8FYjA9qJsvb3OMv6qVjqk/s320/swm4.jpg)
எவ்வளவு திட்டங்கள், பொருளாதார வசதிகள் இருந்தபோதும், வறுமை, நிலவுடமைப் பிரச்சினைகள், முறையற்ற நிருவாகம், உள்ளுராட்சி நிறுவனங்களின் அரசியல் ஸ்திரப்பாடின்மை, சுகாதாரப் பிரச்சினைகளின் அறிவின்மை, கவனமற்ற கழிவகற்றல், ஊழல், யுத்தம் போன்றவையும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் பிரச்சினையின் சிக்கல்களை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கின்றன. திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான 4R அடிப்படை அறிவானது,
ஒவ்வொரு மக்களினதும், நிருவாகிகளினதும், உத்தியோகத்தர்களினதும், அரசியல்வாதிகளினதும், பெரும் முதலாளித்துவவாதிகளினதும் வாழ்வியலுடன் ஒரு தவிர்க்க முடியாத கலாச்சாரமாக வளர்த்தெடுக்கப்பட்டால்தான், (அதுவும் மிகச் சிறிய வயதிலிருந்தே) கழிவுகளினால் உருவாகும் பிரச்சினைகளிலிருந்தும், அனர்த்தங்களிலிருந்தும் எம்மைப் பாதுகாத்து ஒரு தூய்மையான ஆரோக்கியமான புதிய தேசத்தை வருங்கால சந்ததிகளுக்கு நாம் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்பதில் உண்மைகள் இல்லாமல் இல்லை.
No comments:
Post a Comment